TN Village Assistant Job Notification: VAO உதவியாளர் வேலை அறிவிப்பு

You are currently viewing TN Village Assistant Job Notification: VAO உதவியாளர் வேலை அறிவிப்பு

TN Village Assistant Job Notification : திண்டுக்கல் மேற்கு தாலுகா ஊராட்சி அலுவலகத்தில கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு

TN Village Assistant Job Notification :

திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்திலிருந்து காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 24.08.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: திண்டுக்கல் மேற்கு தாலுகா ஊராட்சி அலுவலகம்

பணியின் பெயர்: கிராம உதவியாளர் ( Village Assistant)

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 05 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மிதிவண்டி ஓட்ட தெரிந்தவராக இருப்பது அவசியமானது ஆகும். மேலும் இப்பணிக்கு உள்ளூரை சேர்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

ஊதியம்: Rs.15,700 முதல். மேலும் இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

வயது வரம்பு: 30.06.2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராகவும் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

தேர்வு செயல்முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 24.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.08.2022

Notification for திண்டுக்கல் மேற்கு தாலுகா ஊராட்சி அலுவலகம் 2022: Click Here

ண்டுக்கல் மேற்கு வட்டம், சீலப்பாடி மற்றும் தெத்துப்பட்டி கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

திண்டுக்கல் மேற்கு வட்டம், சீலப்பாடி மற்றும் தெத்துப்பட்டி கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு பின்வரும் தகுதிகளை கொண்ட நபர்கள் தங்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், வயது, சாதி குறித்த ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பத்தை 24.08.2022-ம் தேதிக்குள் திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்திட வேண்டும். மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அந்தந்த கிராமத்தைச் சேர்ந்தவராகவோ, அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவராகவோ இருக்க வேண்டும்.

தகுதிகள்:

1.கல்வித்தகுதி: கல்வித் தகுதி குறைந்த பட்சம் 5-ம் வகுப்பு தேர்ச்சி.

2.வயது வரம்பு: (30.06.2022 அன்று) குறைந்த பட்சம் 21ஆண்டுகள், அதிகபட்சம் இதர பிரிவு/30-ம், பி.வ. /மி.பி.வ./32-ம், தா.வ./பழங்குடியினர்/37-ம் இருக்க வேண்டும்.

3.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, மேற்படி பதிவு நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

4.காலியிட விபரம்:

1.சீலப்பாடி கிராமம்- BC (Other than Backward Class Muslims) Non- Priority – Tamil Medium

2.தெத்துப்பட்டி கிராமம் – ST – Priority – (Both Men and Woman) – Tamil Medium

5.காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யும் பொழுது

அ.பணியிடம் காலியாக உள்ள கிராமம்,

ஆ. 2 கி.மீ. சுற்றளவில் அருகாமை கிராமங்கள் அளவிலும்,

இ.இல்லாத நிலையில் குறுவட்ட அளவிலும்,

ஈ.குறுவட்ட அளவிலும் தகுதியான நபர்கள் கிடைக்காத பட்சத்தில் காலிப்பணியிடம் அமைந்துள்ள வட்ட அளவில் மட்டுமே தகுதி வாய்ந்த நபர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்படும்.

6.மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

இவ்வாறு திண்டுக்கல் (மேற்கு) வட்டாட்சியர் திரு.எம்.கே.ரமேஷ்பாபு தெரிவித்துள்ளார்.

Apply Here: Click Here

This Post Has One Comment

  1. N.Nachi

    Clerk,

Comments are closed.